தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விருது! – முதல்வர் உத்தரவு!

செவ்வாய், 27 ஜூலை 2021 (11:46 IST)
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவர்களை கவுரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றுபவர்களுக்கு தகைசால் என்ற புதிய விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்காக தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை உள்ளடக்கிய குழு ஒன்றையும் அமைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்