தஞ்சாவூரில் மற்றொரு பேருந்து மீது ரிவர்ஸ் எடுத்து மோதிய ஓட்டுனர்!

திங்கள், 21 நவம்பர் 2022 (17:11 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில், பேருந்து எடுக்கும்  நேரம் தொடர்பான ஒரு பேருந்து, மற்றொரு பேருந்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட  நேரத்திற்கு  பேருந்து எடுப்பது தொடர்பாக பிரச்சனை வரும். சில நேரஙள் வாக்கு வாதங்கள் முற்றி, இதன் மூலம், பயணிகளும் பாதிப்படுவர்.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு பேருந்து மற்றோரு பேருந்து மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில். இன்று மாதியம், பேருந்து புறப்படும் நேரப் பிரச்சனையின் காரணமாக  இரு ஓட்டுனர்களுக்கு இடையே, தகராறு ஏற்பட்டது.

இதில், ஒரு பேருந்து ஓட்டுனர் பஸ்ஸை , ரிவர்ஸ் எடுத்து,  மற்றொரு பேருந்து மீது மோதினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்