277 ரன்கள் சேர்த்து ரோஹித் ஷர்மாவின் சாதனையை தகர்த்த தமிழக வீரர் ஜெகதீசன்!

திங்கள், 21 நவம்பர் 2022 (15:18 IST)
விஜய் ஹசாரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் அருணாசலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை தொடர் போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. இன்று இந்த போட்டியில் தமிழக அணியும், அருணாசலப் பிரதேச அணியும் மோதின.

இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 506 ரன்கள் சேர்த்தது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இந்த இன்னிங்ஸில் அவர் 25 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் விளாசினார்.  ஜெகதீசன் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார்.

இதன் மூலம் முதல் தரப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக ரோஹித் ஷர்மாவே உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்