ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

Mahendran

புதன், 25 ஜூன் 2025 (11:54 IST)
ஆகஸ்ட் 15 முதல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முழுமையாக அரசியல் களத்தில் இறங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக மூன்று நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும், அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தவெக தலைவர் விஜய் மீது இதுவரை முன்வைக்கப்பட்ட ஒரே குற்றச்சாட்டு, அவர் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடவில்லை என்பதுதான். இந்த நிலையில், சமீபத்தில் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய், அடுத்த கட்டமாக ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள மூன்று நகரங்களில் இந்த ரோட் ஷோ நடத்தப்பட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த ரோட் ஷோவை தொடர்ந்து, அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், குறிப்பாக பெரும்பாலான கிராம மக்களை கவரும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், தவெக தலைவர் விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்கும் நாள் நெருங்கிவிட்டதால், அவரது கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்