TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு !

திங்கள், 16 மார்ச் 2020 (18:02 IST)
TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில்  பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் கை சுத்திகரிப்பான்  வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதுகுறித்த அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும்  தமிழக  அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்