சார்ஜ் போட்டு கொண்டு பேசியதால் விபரீதம்.. பரிதாபமாக உயிரிழந்த தஞ்சை பெண்..

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (15:51 IST)
சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசிய 33 வயது பெண் ஒருவர் செல்போன் வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
செல்போன் சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும்போது பேசக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோகிலா என்ற 33 வயது பெண், தனது வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் பேசி உள்ளார். 
 
இந்த நிலையில் திடீர் என செல்போன் வெடித்தது. இதனால்  அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் நபர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
சார்ஜ் போட்டுக் கொண்டே போனில் பேசிய பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்