உடல் உறுப்பு தானம் பெற ஆதார் அவசியம்! – தமிழக அரசு புதிய உத்தரவு!

திங்கள், 15 நவம்பர் 2021 (12:04 IST)
தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குதல் மற்றும் பெறுதலுக்கு ஆதார் அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்தல் மற்றும் அதை பெறுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக ஆதார் கார்டு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் உடல் உறுப்புகளுக்காக இணையதளத்தில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்படுபவர்கள், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆகியோர் ஆதார் கார்டு மூலம் வசதிகளை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்