பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்! – தமிழக அரசு அறிவிப்பு!

திங்கள், 15 நவம்பர் 2021 (11:29 IST)
தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இ சேவை மையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கூட பயிர் காப்பீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்