அடித்து வெளுக்கும் மழை; பாதுகாப்பான இடத்துக்கு போங்க! – மக்களுக்கு திடீர் எச்சரிக்கை!

திங்கள், 16 நவம்பர் 2020 (11:59 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியதை தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது. தாமதமாக பருவமழை தொடங்கியிருந்தாலும் மழை பொழிவு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு, தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்