தீபாவளிக்கு பின் விலை உயரும் தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

திங்கள், 16 நவம்பர் 2020 (11:09 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தீபாவளிக்கு பிறகு அதிரடியாக விலை உயர தொடங்கியுள்ளது.
 

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.  

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.38,568க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து ரூ.4,821-க்கு விற்பனை ஆகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்