தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:32 IST)
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனா சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி நீலகிரியில் கனமழையும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யுமாம் சென்னையை பொருத்தவரை ஒரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்