சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், , தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டும் காலை 9.30 மணி முதல் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் பட்ஜெட் ஒளிபரப்பு செய்யப்படுவதால் ஏதாவது சர்ப்ரைஸ் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.