இதன் ஒரு பகுதியாக, இரட்டை அடுக்கு அங்கீகாரத்திற்கு (2FA) பாதுகாப்பு அம்சங்கள் அல்லது பாஸ்வேர்டு பயன்படுத்தும் பயனர்கள், நவம்பர் 10, 2025-க்குள் தங்கள் சான்றுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று X தெரிவித்துள்ளது.
நவம்பர் 10-க்குள் மீண்டும் பதிவு செய்ய தவறினால், பயனர்களின் கணக்குகள் தானாகவே லாக் செய்யப்படும். அதன் பிறகு, அவர்கள் மீண்டும் பதிவு செய்தாலோ அல்லது வேறொரு 2FA முறைக்கு மாறினாலோ மட்டுமே கணக்கை அணுக முடியும். இந்த நடவடிக்கை, X-ஐ 'சூப்பர் செயலியாக' மாற்றும் மஸ்க்கின் இலக்கை நோக்கி நகரும் முக்கியப் படியாகும்.