ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (16:02 IST)
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க இந்திய அரசு சட்டப்படி சாத்தியம் இல்லை. வரும் காலத்தில் இது குறித்து சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு உள்ளது.
 
எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். ஆனால், இது குறித்து, மத்திய அரசு முறைப்படி இதுவரை அறிவிக்கவில்லை.
 
அடுத்த கட்டுரையில்