சென்னை வரும் ஸ்புட்னிக் தடுப்பூசி; ஜூன் முதல் செலுத்தப்படும்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:54 IST)
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சென்னை வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் ஸ்புட்னிக் வி சோதனை நடத்தப்பட்ட நிலையில் ஜூன் 2வது வாரம் முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சென்னை அப்போலோ மருத்துவமனை வந்தடைய உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்