செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பது குறித்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

வெள்ளி, 21 ஜூலை 2023 (15:46 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதி இல்லாதவர் என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு வாதங்களுக்காக விசாரணையை தள்ளி வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  
 
மேலும் இந்த வழக்கின் விசாரணையின் போது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள்  பதவியில் இருக்கலாம் என்ற விதி இருக்கும் நிலையில் எந்த வகையில் அமைச்சர் பதவியில் இருந்து  செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்