ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Siva

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (16:10 IST)
கரண் ஜோஹர் இயக்கிய 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் ரூ. 35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிடிபட்டார். அவர் நேற்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை பிடித்தனர்.
 
அவரது பயண பையை சோதித்தபோது, ரகசிய அறையில் பிளாஸ்டிக் பைகளில் வெள்ளை நிறப் பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது கோகைன் என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
 
விசாரணையில், இந்த நடிகர் கம்போடியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் கோகைனை மும்பை அல்லது டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட நடிகரின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில் வருண் தவான், ஆலியா பட் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் பாலிவுட் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்