கல்லூரிகளுக்கு இனிமேல் சனிக்கிழமை வேலை நாள்!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (22:24 IST)
நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வந்த நிலையில்,  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின.

வகுப்புகள் தாமதமாகத் தொடங்கியதால், பாடங்களை விரைவில் முடிக்க வேண்டிய  கட்டாயத்தில் பேராசிரியர்கள் உள்ளன.

இந்த நிலையில், பாடத் திட்டங்களை நிறைவு செய்ய குறைந்த காலமே உள்ளதால்,  பாடத்திட்டத்தை முடிக்கும் வகையில்,  சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் மே 1 ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்