வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைநாள்: அதிரடி அறிவிப்பு

வியாழன், 17 நவம்பர் 2022 (16:18 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும்வரும் சனிக்கிழமை செயல்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரிலிருந்து திரும்புவதற்கு வசதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் அன்று விடுமுறை விடப்பட்டது 
 
இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் கடந்த சில நாட்களாக மழை காரணமாக விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் அதற்கு ஈடு செய்ய மேலும் சில சனிக்கிழமைகள் பள்ளி செயல்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்