சசிக்கலா நலமுடன் உள்ளார்… சிகிச்சை தொடர்கிறது! – சிறை வட்டாரங்கள் தகவல்!

புதன், 20 ஜனவரி 2021 (16:57 IST)
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலாவுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்ட நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளதாக சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சிறை தண்டனை முடிந்த நிலையில் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். அவரது விடுதலையை எதிர்நோக்கி பலர் காத்துள்ள நிலையில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலமுடன் உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதாகவும் சிறை வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது, எனினும் இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்