போதையில் சாலையில் செல்வோரை அரிவாளால் தாக்கிய ரவுடிகள்

திங்கள், 11 ஜூன் 2018 (08:16 IST)
சென்னை செம்மஞ்சேரியில் போதையில் சாலையில் செல்வோரையெல்லாம் ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிலருக்கும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்றிரவு பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் போதையில் சுனாமி நகர் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளனர். மேலும் அவ்வழியே சென்ற 3 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்