வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், 12 மே 2020 (15:43 IST)
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.  வெப்பச்சலனத்தால் வீட்டில் உள்ள மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், , திருநெல்வேலி கன்னியாகுமரி  அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்