தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:23 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த  48 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை கால வந்துவிட்டதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறட்சி காணப்படுகிறது. இந்நிலையில்,  வெப்பச் சலனம் காரணமாக, தேனி, மதுரை, தருமபுரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காரைக்காலில் வறண்டவானிலையே நிலவும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்