தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva

திங்கள், 22 ஜூலை 2024 (11:53 IST)
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாகவும் வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்