காலை 10 மணி வரை மழை பெய்யும்: 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:29 IST)
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவ மழையும் தற்போது தீவிரமடைந்து உள்ளது

இந்த நிலையில்  இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்