3 நாட்களுக்கு சூட்டைத் தணிக்கும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்..? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K

வெள்ளி, 11 ஜூலை 2025 (13:37 IST)

மேற்கு திசை காற்று திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

15 முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மழை பெய்யும் பகுதிகள் தவிர சில பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்