தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் அறிவித்துள்ளதாவது:
கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்பத்தினர், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர்.