மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தின் மகர துவாரில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எம்.பி.க்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, "வாக்கு திருடன்" என்று முழக்கமிட்டு, 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் "வாக்குத் திருட்டை" கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.