தி.மு.க.வின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவர், விஜய் மீது இந்த புகாரை அளித்துள்ளார். அதில், "விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக" குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், முதல்வரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த கருத்துகள் உள்ளிட்ட விஜய்யின் பேச்சு, மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தன்னை மக்கள் சந்திப்பதை தடுக்க முயற்சிப்பதாக விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தி.மு.க.வின் இந்தப் புகார், ஆளும் கட்சிக்கும், விஜய்க்கும் இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.