பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: முடிவே இல்லையா?

புதன், 13 ஜனவரி 2021 (08:33 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே இருந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருப்பதுதான் இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோலின் விலை ரூ.87.18க்கு விற்பனையாகிறது. இன்று மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.79.95க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டீசல் விலை இன்று மட்டும் 23 காசுகள் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து இதற்கு முடிவே இல்லையே என பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்