தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி? – கூகிளில் தேடும் மக்கள்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:15 IST)
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தக்காளி இல்லாமல் சமைப்பது பற்றி மக்கள் கூகிளில் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.150 ஐ தொட்டுள்ளது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் மக்கள் பலரும் தக்காளி வாங்க முடியாத சூழலில் சிக்கியுள்ளதால் கூகிளில் தக்காளி இல்லாமல் குழம்பு, சட்னி போன்றவை செய்வது எப்படி என தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்