தமிழகத்தில் அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம்: முரளிதர ராவ்

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (05:15 IST)
தமிழக சட்ட சபை தேர்தலில், தமிழக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மேலிப்பார்வையாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக வேட்பாளர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
மே 6 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி போன்ற முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
 
தமிழக தேர்தலில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒரு சார்பாக செயல்படுகின்றனர். அவர்களது செயல்பாடுகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்