ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு (2017) முதல் புதிய ரேஷன் கார்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ’குடும்பதாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டையில் முழுமையாக விவரங்களை பெற்று வருகிற 30ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.