சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களை போலவே, மகா சிவராத்திரி உள்பட சில முக்கிய தினங்களில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இதனால் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வணிகம் சரிந்து வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று பங்குச் சந்தை முடிவின்போது சில புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் அதே நேரத்தில், பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேறுமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொடர்ச்சியான சரிவு காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் ஏராளமான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.