புரட்டாசி முடிஞ்சிட்டே.. மீன் சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள்!

ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (10:29 IST)
இன்றுடன் புரட்டாசி மாதம் முடிவடையும் நிலையில் இன்றே அசைவ பிரியர்கள் பலர் மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்துள்ளனர்.

புரட்டாசி மாதம் அசைவம் ஏதும் சாப்பிடாமல் பலர் விரதம் பின்பற்றும் நிலையில் அந்த காலக்கட்டத்தில் மீன், கோழி உள்ளிட்ட அசைவங்கள் விற்பனை மந்தமாவதுடன், விலையும் சல்லிசாய் குறைகின்றன. இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் காரணமாக கடந்த சில வாரங்களாக மீன் விலை மற்றும் விற்பனை குறைந்திருந்தது.

இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி கடைசி சனியும் முடிந்துவிட்டதால் இன்றே அசைவம் வாங்க அசைவ பிரியர்கள் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக மக்கள் குவிந்த நிலையில் மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் ஆடு, கோழி கறிக்கடைகளிலும் மக்கள் அதிகமாக கறி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்