ரேசன் கடைகளில் புதிய உத்தரவு ! தமிழக அரசு அதிரடி

செவ்வாய், 20 ஜூலை 2021 (18:56 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  பணியாளர்களைத்தவிர யாரும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  பணிகயாளர்களுடன் வேறு சிலர் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்துத் தற்போது கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நியாயவிலைக்கடைகளில் இனிப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது எனவும், வெளிநபர்கள் ரேசன் கடைகளில் இருப்பது குறித்து தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஒரு ரேசன் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாளர்கள் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்