தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள்!!!

புதன், 21 ஜூலை 2021 (19:01 IST)
தமிழகத்தில் மேலும் புதிய மாநகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என  தமிழக அமைச்சர் கே.என்,நேரு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது நடைபெற்று வருன் நிலையில் மக்களுக்காக புதிய திட்டங்கள்,முதலீட்டு ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் இன்று  சென்னையில் புதிய குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நகப்புறங்களில் சாலை அமைப்பும்போது,  நீர் நிலத்தடி நீர் சேமிப்பிற்குப்  பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஏரி குளங்களை தூர்வாறும்போது, இனி கான்கிரீட் தஙக்ள் அமைக்கப்படாது எனவும், தமிழகத்தில் மேலும் புதிய மாநகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்