தாய் இறந்தது தெரியாமல் பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை : நெஞ்சை உலுக்கும் வீடியோ

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (16:59 IST)
கோவை மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை உடல்நலக் குறைவால், தன்னுடைய குட்டியுடன் வந்து கொண்டிருந்த போது திடீரெனெ ஒரு பள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தது.


 

 
ஆனால் தன்னுடைய தாய் இறந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அந்த யானைக்குட்டி, அந்த யானையை முட்டி முட்டி எழுப்ப முயன்றது. யாரையும் அதன் அருகில் நெருங்க விடவில்லை. நெடுநேரம் ஆகியும் தன்னுடைய தாய் எழாததால், அந்த குட்டி யானை சோகத்துடன் பிளிறியது.
 
அந்த சம்பவம் பார்ப்பவர் மனதில் சோகத்தை வரவழைத்தது. குட்டி யானை அங்கிருந்து சென்ற பின்னர்தான், இறந்து போன யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் கூறினர்.
 

நன்றி : விகடன்
அடுத்த கட்டுரையில்