மீனவர் மீதான கடற்படையின் துப்பாக்கி சூடு: அமைச்சர் எல் முருகன் அளித்த பதில்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:56 IST)
இந்திய கடற்படையினர் தமிழக மீனவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து துறை ரீதியிலான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 
 
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எல் முருகன் இதுகுறித்து துறை ரீதியாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்திய கடற்படை தமிழக மீனவரை சுட்ட சம்பவம் குறித்து ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் மத்திய அரசு இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்