இந்த நிலையில், ஏற்கனவே திருமணமான ஒரு பெண், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ35,000 பணத்திற்காக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் புதிய மணமகனுடன் ஒப்பந்தம் செய்து, திருமணத்தின் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு புதிய மணமகனும் ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்ததால், இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.