நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்… நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!

திங்கள், 15 நவம்பர் 2021 (15:53 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாக கொலிஜியம் அறிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என  மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்