அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது! – உயர்நீதிமன்றம் உத்தரவு!

திங்கள், 15 நவம்பர் 2021 (12:51 IST)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது நான்கு கோவில்கள் சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அட்மிசனும் நடந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் கல்லூரி திறக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு முடிவும் தீர்ப்பின் முடிவை பொறுத்ததே எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்