கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த லாரி

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (17:15 IST)
கொடைக்கானல் மலைப்பகுதியில் லாரி ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதில் கணவன், மனைவி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கொடைக்கானலில் இருந்து மதுரையை நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று வத்தலகுண்டு மலைப்பாதையில் திடீரென்று ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது.

அதில் வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் மதுபோதையில் ஓடியதால்தான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் அந்த லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்