சுவாதி கொலைக்கு கவிதை மூலம் கண்டனம் தெரிவித்த கவிக்கோ அப்துல்ரகுமான்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (17:49 IST)
சுவாதி கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலைக்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது குற்றவாளி கைதாகிவுள்ள நிலையில் கொலைக்கு காரணம் ஒரு தலை காதல் என்று தெரிந்த பின்னர் பலரும் சமுக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் எளிமையாக வரிகள் மூலம் சுவாதி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கவிதை:-
 
மன்மதன்
 
இப்போதெல்லாம்
 
மலர்க் கணைகளை
 
வீசியெறிந்துவிட்டு
 
அரிவாளோடு திரிகிறான்!
 
- கவிக்கோ அப்துல்ரகுமான்
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்