தமிழர்கள் மீது தாக்குதல் எதிரொலி: கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் நொறுக்கம்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (01:56 IST)
ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
 

 
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக இளைஞர் ஒருவர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெற்றது.
 
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்