சென்னையின் கூட்ட நெரிசலில் சிக்கிய ஜெயலலிதா: நெரிசலில் இருந்து மீட்ட காவலர்கள்

Webdunia
வியாழன், 12 மே 2016 (14:29 IST)
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று சென்னையில் உள்ள 15 தொகுதிகளில் வீதி வீதியாக வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். இதில் ஜெயலலிதாவின் வாகனம் கூட்ட நெரிசலில் சிக்கியது.


 
 
நேற்று மாலை 3.30 மணிக்கு திருவல்லிக்கேனி பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா எழும்பூர், துறைமுகம், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், விகம்பாக்கம் உட்பட 15 தொகுதிகளில் வீதி வீதியாக வேன் மூலம் பிரச்சாரம் செய்தார்.
 
ஜெயலலிதா சென்னையில் வேன் மூலம் பிரச்சாரம் செய்ததால் அவர் பிரச்சாரம் செய்த பகுதிகள் ஒருவழி பதையாக மாற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி பட்டனர்.
 
இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனம் வந்த போது அந்த வாகனம் கூட்ட நெரிசலில் சிறிது நேரம் சிக்கியது. உடனடியாக காவலர்கள் வந்து கூட்ட நெரிசலை அப்புறப்படுத்தி ஜெயலலிதாவின் வாகனத்தை மீட்டனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்