அப்போலோவில் ஜெ ; புகைப்படம் வெளியிடப்படும் ; புகழேந்தி பரபரப்பு பேட்டி

Webdunia
புதன், 3 மே 2017 (12:31 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழ்ந்தி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். தற்போது அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையில் ஜெ.விற்கு முறையாக சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது உடனிருந்த ஓ.பி.எஸ் தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார்.


 

 
எனவே, சரியான நேரத்தில் ஜெ.வின் புகைப்படம் வெளியிடப்படும். ஜெ.வின் புகைப்படம் வெளியானால் எல்லா உண்மைகளும்  வெளிச்சத்திற்கு வரும். அதன் மூலம் பலரின் முகத்திரை கிழியும்” என அவர் கூறினார்.
 
இவரின் இந்த பேட்டி அரசியல் மற்றும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்