பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பிஹார் மக்களைத் திமுக-வினர் துன்புறுத்துகின்றனர்" என்று பேசினார். அதற்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "பிரதமர் மோடி, தான் நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் என்ற பொறுப்பையே அடிக்கடி மறந்துவிடுகிறார். அவர் இதுபோன்ற பேச்சுகளால் தனது பதவிக்கான மாண்பை இழக்கக் கூடாது. தமிழர்களுக்கும் பிஹார் மக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
	 
	"திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ. 888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
	 
	உழைக்கும் பிகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பிகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்வர் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பிரதமர், தமிழகத்தில் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பதுதான் இருக்கிறது. 
	 
	எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதேபோல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.