சட்டங்கள் நிறைவேற்றும்போது 'முறையான கலந்தாலோசனை இல்லை', 'போதிய உறுப்பினர்கள் இல்லை' போன்ற காரணங்களை கூறி, சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இதுதொடர்பான தீர்ப்புகள் இல்லையெனில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
	 
	மேலும், சட்டங்களுக்கு ஆதரவாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய வழக்கறிஞர் முயன்றபோது, நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்து, "இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறினர்.