நரிக்கு இடம் கொடுத்தால் அது கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம் - சீமான் ’டுவீட்’

புதன், 18 டிசம்பர் 2019 (21:22 IST)
இந்நாட்டின் பூர்வக்குடிகளை, வந்து குடியேறியவர்கள் 'உங்கள் குடியுரிமை சான்றிதழ் காட்டுங்கள்' என்கிறான்  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக தலைமையிலான  ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
நரிக்கு இடம் கொடுத்தால் அது கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்;  அதுபோல் இந்நாட்டின் பூர்வக்குடிகளை, வந்து குடியேறியவர்கள் 'உங்கள் குடியுரிமை சான்றிதழ் காட்டுங்கள்' என்கிறான்  என  அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்